பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

富彦 "கட்டுப் பாண்டி ஆடலாமா?” *L(Q} ! " கட்டுப்பாண்டி ஆடப் போருேமே!-தங்கமே தில்லாலே! கட்டுச் சோறு போடத்தானே ஆணில்லே! தங்கமே தன்னுனே!" தானுக இட்டுக்கட்டி, இப்படி ராகம் நீட்டிப் பாடினள், அகிலாண்டம். இழுத்த இடத்துக்குத் தொண்டை சென்றது:) காதுச் சிமிக்கிகள் பளபளத்தன. பாண்டி விளையாட்டு கூடிவந்தது. ---- 'பசு' சேர்ந்த குழிக் காய்களை மறதியாக அஞ்சலை அள் 'ளித் தன் பங்கில் சேர்த்து அந்தத் தவற்றை மறைக்க வல்லடி வழக்குப் பேசிக் கொண்டிருந்ததால் ஆட்டம் அதிகாரப்பூர்வ மாகக் கலைக்கப்பட்டது. . . . . . - -- - - - - தோழிகள் சென்றபின் அன்னக்கிளி வீட்டு வேலைகளை மெல்ல செய்து கொண்டு இருந்தாள். (്ഖു முடியும் வேளை. பொன்னுத்தா தலதெறிக்க ஒடி வந்தாள். நல்லவேளை, அவளுக்குத் தலை தெறித்துவிடவில்லை. அவள் தந்தை இன்னக் சாமி அம்பலம் செய்த அதிருஷ்டம்தான், அது: ‘. . . . "அக்கா, அக்கா!... உன் மச்சான் வந்தாச்சாம்ல, ஒனக் குத் தெரியாதா?. எங்க சின்னுயி ஓடிப்போயிருக்குது. அந்த ஆம்பிளையைப் பார்க்கிறதுக்கு" என்ருள் பொன்னத்தா. தன் அத்தை மகன் வீரமணி வந்து சேர்ந்துவிட்ட இன்பச் செய்தி அவளது கன்னி மனத்தில் பால் வார்த்தது. பொங்கிய அன்பு வார்த்து, ஆரோகணித்த பாசம் வார்த்து, பக்குவப் பட்ட பக்தி வார்த்துக் கும்பிட்ட அந்தக் கடமைக்குப் பலன் கிட்டிவிட்டது. ஆத்தா அல்லாம் உன் தயவுதான் ஒங் குஞ்சு செஞ்ச வேண்டுதலயை நிறைவேத்தி வச்சுப்பிட்டாய் நீ நாளை வெள்ளிக்கு ஒஞ் சந்நிதானத்திலே சிதறுகாய் அடிச்