பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

'இல்லை, அது பசுமாடு, நாம் செல்லவேண்டிய இடம் இன்னும் தூரத்திலிருக்கிறது' என்றாள் சிறுமி. பிறகு தவளைகள் கத்தத் தொடங்கின.

அதைக்கேட்டு, இராஜகுரு, எவ்வளவு அருமையான ஒலி தேவாலயங்களில் மணிகள் அடிப்பது போல இருக்கிறதே!' என்று இசையைப் பாராட்டத் தொடங்கினார்.

'இல்லை, இல்லை, இவைகள் தவளைகள்! சீக்கிரத்தில் நாம் குயிலை அடைந்துவிடுவோம்!' என்றாள் சிறுமி.

சிறிது தூரத்தில் குயில் பாடிக்கொண்டிருந்தது.

சிறுமி, ஒரு மரத்தின் கிளையைக் காட்டி, 'அதோ இருப்பது தான் குயில்! சிறிய உடல், கறுப்பு நிறம்! அதுதான் பாடுகிறது! என்று கூறினாள்.

"இது சாதாரணச் சிறு பறவையாகத்தான் தோற்றுகின்றது. இதைத் தேடிப் பெருங்கூட்டமான பிரதானிகளும், அதிகாரிகளும் இங்கே வந்திருக்கிறோம். நம்மையெல்லாம் பார்த்தே அது அஞ்சி நடுங்கியிருக்கும்!' என்று கூறினார் உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர்.

சமைலறைச் சிறுமி குயிலின் முன் சென்று, 'குஞ்சுக் குயிலே, மாட்சிமை மிகுந்த எங்கள் சக்கரவர்த்தி உன் பாட்டைக் கேட்க விரும்புகிறார் என்று வேண்டினாள்.

'ஆகா, மிகுந்த மகிழ்ச்சியோடு வருகிறேன்!' என்றது குயில். அதன் பேச்சு குழலோசையைவிட இனிமையா யிருந்தது.

உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர், இதன் குரல் கிண்கிணி ஒலிபோலவே இருக்கின்றது! இதன் சிறு தொண்டை எப்படித் துடியாய்த் துடிக்கின்றது! இதைப் பற்றி நாம் முன்னால் அறியாமலிருந்தது வியப்புத்தான். இராஜ சபையில் இது வெற்றிமேல் வெற்றியாகப் பெறும் என்பது நிச்சயம்!' என்று கூறினார்.

குயில், சக்கரவர்த்தி அந்தக் கூட்டத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டு, சக்கரவர்த்திக்காக நான் மறுபடி பாடட்டும்மா?' என்று கேட்டது. அருமைக் குயிலே, இன்றிரவு அரண்மனையில் நடைபெறும் ஒரு விழாவிற்கு உன்னை அழைக்கும் பெருமை எனக்குக்