பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

21




காந்தியைத் தாக்குவதற்காகத் திரண்டிருந்த வெள்ளையர் கூட்டம் அதோ காந்தி வருகிறார் என்று வெறித் தனத்தோடு கூச்சலிட்டுக் கலவரம் செய்தார்கள். பிறகு அவரை ரிக்‌ஷாவில் ஏற்றி அனுப்பிட லாப்டன் முயன்றபோது, அதைத் தடுத்து வன்முறையில் அவர்கள் ஈடுபட்டதைக் கண்ட ரிக்ஷாக்காரன் பயந்து ஓடி விட்டான்.

பிறகு, காந்தியைத் தாக்க அந்த வன்முறைக் கூட்டம் முயன்றது. பாதுகாப்புக்கு வந்திருந்த ஒரு காவல் துறை அதிகாரியின் மனைவி, காந்தியைக் காப்பாற்றி ரஸ்தோம் ஜி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வெறிக் கூட்டத்தினரின் ஆரவார அட்டகாசங்களைக் கண்ட கஸ்தூரி பாய் பயந்து போனார். வெளிநாட்டில் முதல் அனுபவம் அல்லவா அது?

கஸ்தூரி பாயும் காந்தியும் அவரது குழந்தைகளும், வழக்குரைஞர் லாப்டனும் தக்க பாதுகாப்புடன் ரஸ்தோம் ஜி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்!

xxx