பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அகிம்சை நெறியின் ஆரம்பம்

நேட்டால் என்ற நகரில் 'இந்தியர் காங்கிரஸ்' என்ற ஓர் இயக்கத்தைத் துவக்கி, அதற்குரிய உறுப்பினர்களைச் சேர்த்தார் காந்தியடிகள் இதற்கிடையில் அவரைத் தாக்க வந்த வெள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தென்னாப்ரிக்க இந்தியர்கள் அவரை வற்புறுத்தினார்கள்.

தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாது வெள்ளையர்கள் என்மீது கோபமடைந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அவர்களை மன்னித்து விடுவது தான் மனிதத் தன்மை என்று இந்தியர்களுக்குக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார். தனது அகிம்சா நெறிக்கு கால் கோள் விழா நடத்தும் வகையில் வெள்ளையர்களை மன்னித்து விட்டார். இதனை அறிந்த வெள்ளையர்களிற்கு காந்தி மீது ஒருவித அனுதாபத்தை உருவாக்கிவிட்டது.

இந்தியாவிலிருந்து டர்பன் நகர் வந்த காந்தி, கஸ்தூரி பாயுடனும், தனது பிள்ளைகளுடனும் நேராகத் தென் ஆப்ரிக்காவிலே உள்ள இந்தியர்கள் வாழும் நேட்டால் என்ற நகருக்கு வந்து, ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் என்ற தனி வீடு ஒன்றை எடுத்துக் குடும்பத்தை நடத்தி வந்தார்.

நேட்டால் நகரிலே உள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி, அதன் மூலமாக, வெள்ளையர்களின் நிற வெறியை எதிர்க்கத் திட்டமிட்டுக் காந்தி பணியாற்றி வந்தார்.