பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அன்னை கஸ்தூரிபாயின்



"அது சரி, உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? நான் போட்டிருந்த நகைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு என்னை நிர்க்கதியாக நிறுத்தி விட்டீர்களே! இப்படிப்பட்ட நீங்களா எனது மருமகள்களுக்கு நகை போடுவீர்கள்? எனது பிள்ளைகளை இப்போதே சாமியார்களாக்கி விட்டீர்கள். நீங்களா மருமகள்கள் வந்த பிறகு நகைபோடப் போகிறீர்கள்? எனக்குப் பரிசாக மக்கள் தந்த நகைகளை நான் திருப்பித் தர மாட்டேன்" என்று கூறினார் கஸ்தூரிபாய்.

"அது சரி, இந்த நகைகளை மக்கள் ஏன் தந்தார்கள்? உனது தொண்டுக்கா? அல்லது எனது சேவைக்கா? அதைச் சொல்" என்றார் காந்தியடிகள்.

"உங்களுடைய தொண்டுக்காகத்தான் மக்கள் கொடுத்தார்கள் என்று இருக்கட்டுமே. நீங்கள் செய்தால் என்ன? நான் செய்தால் என்ன? நீங்கள் செய்த தொண்டுக்கு நான் உடனிருந்து பாடுபடவில்லையா? இரவும் பகலும் கண் விழித்துப் பணி செய்தது எல்லாம் தொண்டாகப்பட வில்லையா? என்னிடம் எவ்வளவு அருவருப்பான, கேவலமான, அற்பமான வேலைகளை எல்லாம் செய்யச் சொல்லி வேலை வாங்கினீர்கள்? ரத்தக் கண்ணிர் வடிக்கும் அளவிற்கு என்னை அலைக்கழித்து, அதட்டி, உருட்டி, நோய் வாய்ப்படும் அளவிற்கு வேலை செய்யச் சொன்னீர்கள்? நானும் மக்களுக்காக உழைக்கவில்லையா?" என்று கஸ்தூரிபாய் நறுக் நறுக்கென்று சில கேள்விகளைக் கேட்டுக் கண்ணிர் விட்டார்.

கஸ்தூரிபாய் பேசியதை எல்லாம் காந்தியடிகள் ஏற்கவில்லை. நகைகளைப் பொது நிதியில் சேர்ப்பது தான் நியாயம் என்று கூறி, மனைவியை எப்படியெப்படியோ சமாதானம் செய்து நகைகளை வாங்கிவிட்டார் அவர்.