பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

49



இதற்குமுன்பு கிடைத்த பரிசுகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவற்றை நிதியாக்கி அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்கி அந்த நிதிகளை எல்லாம் திருப்பி மக்களுக்கே உதவுமாறு செலவு செய்திட திட்டம் தீட்டினார்.

கணவன், பொதுவாழ்க்கையில் உயர்ந்து நல்ல பெயர் எடுக்க, மனைவி கஸ்துரிபாய் எத்தகைய துணைபுரிந்தார் என்பதற்கு, அவர் தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை எல்லாம் கணவரிடமே திருப்பிக் கொடுத்த பெருந்தன்மைச் செயலும் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

xxx