பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சபர்மதி ஆசிரமத் தலைவி!
கஸ்தூரிபாயின் தேசத் தொண்டு!

ளிமண்ணிலிருந்து போராட்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்தவர் மகாத்மாகாந்தி என்று காந்தியடிகளைப் புகழ்ந்த கோபால கிருஷ்ண கோகலே, அப்போது இங்கிலாந்து நாட்டிலே இருந்தார்.

தென்னாப்பிரிக்காவிலே சட்டமறுப்புப் போராட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி கண்ட மகாத்மா காந்தி, அங்கே இருந்து இந்தியா திரும்பியபோது, நேராக இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று கோபால கிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார்.

கி.பி. 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டிலே இருந்து இந்தியாவிற்கு காந்தியடிகள் தனது குடும்பத்தோடு அகமதாபாத் நகர்வந்து சேர்ந்து, அங்கே சபர்மதி என்ற ஓர் ஆசிரமத்தைத் துவங்கி அதிலே வசித்து வந்தார்.

ஆசிரமத்தில் முதல் உறுப்பினராகத் தனது மனைவியையும், அத்துடன் இருபத்தைந்து உறுப்பினர்களையும் அவர் சேர்த்தார். எளிய முறையில் வாழ்ந்து தேச சேவை செய்வதுதான் ஆசிரமத்தின் நோக்கமாக இருந்தது.

எல்லோருக்கும் பொதுவான சமையல் அறை; சேர்ந்து வேலை செய்து சமைத்து உண்பது. இந்த ஆசிரமத்தின் தலைவியாகவும், அன்னையாகவும் கஸ்தூரிபாய் விளங்கினார்.