பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

71


வேண்டும் என்பதே உங்கள் நோக்கம் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.

"உங்களுக்குள் சிலருக்காவது மனச்சாட்சி இருக்காதா? நொந்து நலியும் ஒரு தாயின் சோகக் குரல் உங்களுடைய உள்ளத்தைத் தீண்டாதா? அதனால், அவர்கள் என் பிள்ளையை நேர் வழிக்குத் திருப்பிட முயற்சி செய்ய மாட்டார்களா? தெய்வ சந்நிதானத்தில் நியாயமான வேலைகளையே செய்ய வேண்டும் என்று எனது மகனுக்குக் கூறினேன். அதையே உங்களுக்கும் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்."

அன்னை கஸ்தூரிபாய், தன்னுடைய மகன் செய்கையால் எவ்வளவு நொந்து போயிருந்தார் என்பதையே மேலே உள்ள இரண்டு கடிதங்களும் உணர்த்துகின்றன.

இதற்குப் பிறகு தான் ஹீராலால் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினார். அவர் தனது செயல்களுக்காக வருந்தினார். ஆனால் அவர், தனது பெற்றோர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

xxx