பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அன்னை கஸ்தூரிபாயின்



இது இரவு சுமார் பத்து மணி நேரம் வரை நீடித்தது. இருவருமே ஏறக்குறைய 1906-ஆம் ஆண்டு முதல் இல்லறத் துறவறம் ஏற்றவர்கள். ஆனால் அந்த மரண மயக்கம் அவ்வளவு நேரம் நீடித்தபடியே நின்றது. இடையிடையே ஹேராம், ஹேராம் என்று அவர்களுடைய உதடுகள் ஒலித்தன.

திடீரென்று கஸ்தூரிபாய்க்கு இருமல் வந்து விட்டது. அப்போது பெருமான் காந்தி தனது கைகளால் மிருதுவாகத் தடவிக் கொடுத்தபடியே இருந்தார்:

இக்காட்சி தான் உலகக் கவிஞர்கள் எவரும் இன்று வரை எழுதாத, பாவேந்தர் பாரதிதாசனாரின், குடும்ப விளக்கில் வருகிறது.

கஸ்தூரி பாய், திருவள்ளுவர் கூறிய “வாழ்க்கைத் துணை நலம்" என்ற தத்துவ இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்து காட்டி மறைந்த பெருமாட்டியாவார்!

அந்த இரு பெரும் ஞானிகளின் உடல்கள் நம்மிடையே நடமாடாவிட்டாலும், அவர்கள் வாழ்ந்து காட்டிய உயிரினும் மேலான ஒழுக்க விழுப்ப மேன்மைச் சீலங்கள், "நெருநெல் உளனொருவன் இன்றில்லை" என்னும் பெருமையை இந்த உலகிலே உலாவரச் செய்துள்ளார்கள்: வாழ்க கஸ்தூரிபாய் போன்ற வாழ்க்கைத் துணை நலங்கள்

xxx