பக்கம்:அன்னை தெரேசா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

. மக்களிடையிலும் சரிநிகர் சமானமாகப் பரப்பவும் வேண்டும்!” 'இந்நேரத்தில், பாரதநாட்டின் அதிகாரபூர்வமாக அரசியல் அமைப்பின் தேசிய ஒருமைப்பாட்டு விதியும் நாட்டிலே அன்பின் கட்டுமானப் பொறுப்பில் அமைந்திட வேண்டிய அமைதியின் அவசியத்தை வற்புறுத்துவ தாகவே அமைந்துள்ளது!- "நாட்டின் உரிமை வாழ் வையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வலுப் படுத்தச் செயலாற்றுவேன்; செயற்படுவேன் என்று உளமார நான் உறுதி கூறுகிறேன்; ஒருபோதும், வன் முறையை நாடேன் எனவும், மதம்-மொழி-வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல் களுக்கும் ஏனைய அரசியல்-பொருளாதாரக் குறைபாடு களுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழி யிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும் நான் மேலும் உறுதியளிக்கின்றேன்!" ஆமாம்: அன்பையும் கருணையையும் ஒருமையுடன் வளர்த்து அமைதியை வணங்கி வாழ்த்திடப் பாரதத்திற்கு ஒர் அன்னை கிடைத்தார்! t சிந்தனையாளரான பத்திரிகையாளர் மால்கம் மக்க ifle-à (Malcom Muggeridge) gpair orth, 1969 assrová கட்டத்தில், அன்னை தெரேசாவைச் சந்தித்தபோது, அறநெறிப் பணி அமைப்பின் தொண்டு முறையின் உயிராதாரமான கொள்கைப் பிடிப்பைப் பற்றி அவரிடம் மிகவும் சுருக்கமாக இவ்வாறு அன்னை விளக்கினர்: "...நாங்கள் ஏழைகளின் உடல்களிலே எங்கள் இயேசு கிறிஸ்துவின் உடலையே ஸ்பரிசிக்கிருேம்; பசி கொண்ட் நமது கர்த்தருக்கே நாங்கள் உணவிடுகின்ருேம்; நிர்வாண மான எங்கள் பிரானுக்கே நாங்கள் உடைகளை உடுத்து கிருேம்; அவ்வாறே, நிழல் இழந்த எங்கள் ஆண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/12&oldid=1273717" இலிருந்து மீள்விக்கப்பட்டது