இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15
புண்ணிய பாரதத் திருநாட்டுக்கு விதி வசமான விட்டகுறை-தொட்ட குறையால் கிடைத்த புண்ணிய விதி!
பாவேந்தர்: "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!" செந்தமிழ்க் கன்னித் துறவியாகிப் பசிப் பிணி போக்கி வாழ் நாளெல்லாம் அமுத சுரபியாகப் பொலிந்த மணிமேகலையின் மறு அவதாரம்!
தெரேசா அன்னை!...
தியாகப் பேரொளி
தெய்வப் பிறவி!
பாவிகளை ரட்சிக்கச் சிலுவையைச் சுமந்த கருணை வள்ளல் ஏசுவின் உயிர் உருவம்!
அறவினைத் தாயார்!
'அன்பின் தூதுவர்கள்' என்னும் தருமப் பணி இயக் கத்தை-அமைப்பை உலகம் முழுவதும் முழுமையாகவே உணரும்; அறியும்!
வாழும் புனிதையான அன்பின் தலைவி தெரேசா ,வாழும் அன்புக்கு ஒர் அன்னை!-அவர்தாம் அன்னை தெரேசா!
தியாகத்தின் பேரொளிப் பிழம்பான தேவமைந்தன், அன்பின் துருவ நட்சத்திரமாக சீர்மிகு மூவுலகிற்கும் அன்று வழிகாட்டினர்.
கன்னித்துறவி அன்னே இன்று வழிகாட்டுகிறார்! தர்மம் வெல்லும்.
அன்புடன் வெல்லும்.
சத்தியம் வெல்லும்.
அன்னை தெரேசா வென்ருர்!
நோபல் பரிசும்வென்றது!