பக்கம்:அன்னை தெரேசா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 நாட்கள் நகர்ந்தன. கிறிஸ்தவத் திருச்சபைகட்கெல்லாம் மூலவராக விளங்கும் மேதகு போப் ஆண்டவருக்கும் அயர்லாந்தில் இயங்கிய லொரெட்டோ தேவாலயத் தலைமைத் தலைவிக்கும் கல்கத்தாவில் செயற்பட்ட லொரெட்டோ கன்னி மாடங்களின் தலைவிக்கும் முறையான அனுமதி கேட்டு, விண்ணப்பங்கள் முறைப்படி பறந்தன. கல்கத்தாவில் செயலாற்றிய பெரிய மதகுருவான 3Guff qasrārl Guñuff offsir (Archbishop Ferdinand Periers) சோதனைகளும் தொடர்ந்தன. தெரேசா சகோதரி, அலான்ஸாலில் நடந்த கன்னி மடத்துப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். - "எனது மனிதப் பிறவிக்கு ஒரு அன்பான பயன் 67 سا سافي அருள் புரிய மாட்டீர்களா, பர்ம பிதாவே!' விம்மிப் புடைத்தார் சகோதரி கன்னி. தியானங்கள் வலுப்பெற்றன. பிரார்த்தனே நோன்புத் தவம் பலித்து விட்டது. அமைதியான அழகோடு அன்புப் பொழுது விடிந்தது! சகோதரி தெரேசாவின் ஏழைநல அன்புப்பொதுத் திருப்பணிக்காக மேதகு போப் ஆண்டவரின் உயர் அனுமதியும் ஆசியும் ரோம் நகரிலிருந்து பறந்தோடி வந்து விட்டன: - பரமபிதாவின் அன்புத் திருமகள் தலை நிமிர்ந்து நின்ருர்! - வங்காளத்தில் இயக்கப்பட்ட லொரெட்டோ பள்ளி களிலெல்லாம் பரவிய சுற்றறிக்கை இதுதான். சகோதரி அக்னெஸ் தெரேசா லொரெட்டோ: கன்னி மடத்திலிருந்து விலகிக் கொள்கிருர்; அதைப் பற்றி இனி யாரும் பேசாதீர்கள்!-தூற்றவும் வேண்டாம், போற்றவும் வேண்டாம்! சகோதரிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்!' -- " ? -- z. - . . . --" அ. தெ. - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/57&oldid=736369" இலிருந்து மீள்விக்கப்பட்டது