பக்கம்:அன்னை தெரேசா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. அன்னே அன்றைக்குச் சாய்ந்தரத்திலும் தொடர்ந்து சந்திக்க நேர்ந்தது. நெகிழ்ச்சியில் விளைந்த அன்பில் வழிந்த அனுதாபம் மேலிட, அம்மையார் நெஞ்சம் தழ தழக்கத் தேவ தூதுவரைக் கூவிக் கூவி அழைத்தார். அந்தரங்கச் சுத்தத்துடன் .ெ ச ய் த தோத்திரத்தின் ஆறுதலில் பிறந்த அலாதியான அமைதியையே நல்ல துணையாகக் கருதிய மாதா, தமது இலட்சியக் கனவை நடைமுறைப்படுத்தவும் முழுமூச்சுடன் முனைப்படைய லாளுர், தம்மையும் அறியாததோர் உத்வேகத்துடன் அன்னை தெ ரே சா உடனடியாகவே மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தார். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்தார். ஏழைகளாகப் பிறந்தவர்கள் உலகத்திலே நல்ல தனமாக வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை; நல்லபடியாகச் சாகவாவது கொடுத்து வைக்க வேண்டாமா? உங்களையும் என்னையும் போலவே, அவர்களும் தெய்வத்தின் பிள்ளைகள் அல்லவா? பின், அவர்களே மட்டிலும் நடுத்தெருக்களிலே நாதியற்ற பினங் களாகச் செத்துமடியச் செய்வது தருமம் ஆகுமா? இத். தகைய அவலத்தை-அநியாயத்தை-அதர்மத்தை அந்தத் தெய்வம் பொறுக்காது; பொறுக்கவே பொறுக்காது, ஐயா! இம்மண்ணில் நிம்மதியாகப் பிறந்தவர்கள், இம்மண்ணிலேயே நிம்மதியுடன் சாவதற்குத் தேவைப் படக் கூடிய நிழல் இடம் ஒன்றைத் தரமாட்டீர்களா, ஐயா? நெஞ்சு உருகி, நெஞ்சை உருக்கும் பேச்சாகவே அவ்வேண்டுகோள் அமைந்தது. - உங்களுக்கு இடம் ஏன் வேண்டும்?” அதிகாரத்தோடு கேள்விக்கணைகள் தொடுக்கப் f-L-L-8öf. ஆருத சோகத்தை ஆற்றமாட்டாதவராக அன்னை நெட்டுயிர்ப்புடன் விடை சொன்னர் இறந்து கொண்டிருக்கிற எளியவர்களுக்கு வாழ் வதற்கு ஒர் இடம் கிடைக்காமற் போனலும், சாவதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/79&oldid=736393" இலிருந்து மீள்விக்கப்பட்டது