பக்கம்:அன்பழைப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

11


விவசாயத்தைத் தவிர வேறு தொழிலும் தேவை என்பதிலே கருத்து வேற்றுமை இருக்க முடியாது!

அரசியல் கட்சிகளின் வலைவில் விழாமல், தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றி கொள்ள வேண்டும் என்று, முன்னாள் முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தினார்கள்- பன் முறை!

அதை நான் வரவேற்கிறேன் குரல் ஒலிக்க முடியாது இருட்டில் கிடக்கும் எழை விவசாயிகளுக்கென்று அமைப்புள்ள சங்கங்கள் அவசியம் தேவை. அதிலும் கட்சி சார்பற்ற விவசாயிகளின் வேதனைகளைப் போக்கப் பாடுபடும் சங்கங்கள் மிக மிகத் தேவை. அதிலும், தன்னலமற்ற, விவசாயிகளின் நலன் கருதிப் பாடு படும் சங்கங்களாக அவைகள் இருக்க வேண்டும் என்பதையே முன்னாள் முதலமைச்சரைப் போல நானும் விரும்புகிறேன்!

ஆகவே, இந்த நேரத்தில் ஓமந்துாா் தலைவரை நான் கேட்டுக் கொள்ளுகிறேன். அவரே விவசாயக் கழகத்தை ஆங்காங்கு ஆரம்பித்துவைக்கவேண்டும். இத்தகைய நல்ல பொறுப்பை ஏற்க அவரே மிக மிகத் தகுதியானவர். அவர் உத்தமர், பற்றற்றவர். பயிர்த்தொழில் புரிபவர் என்று நான் விரும்புகிறேன்.

அதே நேரத்தில், அவர் காலையில் விவசாயிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை அவருக்கு நினைவூட்டித் தெரிவித்துக் கொள்கிறேன். ஓமந்தூரார் அவர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/12&oldid=1501963" இலிருந்து மீள்விக்கப்பட்டது