பக்கம்:அன்பழைப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

19



காலையில் விவசாய சம்பந்தமாக நல்ல புள்ளி விபரங்களை ஓமந்துாரா் தந்தார்கள். அவசியமான, பயன் தரத்தக்க விபரங்கள் அவை. அந்த விபரங்கள் நம்மோடு இருந்துவிட்டால் போதாதே! அவை கிராமங்கள் தோறும் நிலைக்க வேண்டுமே! ஒவ்வாெரு கிராமத்திலும் அதுபாேன்ற புள்ளி விவரங்கள் ஆங்காங்கே உள்ள பொதுச் சாவடிகளில் இடம் பெற வேண்டும். ஓய்வு நேரத்தில், அவைகளைப் பார்த்துப் பொது மக்கள், விளக்கம் பெறும் வகையில் செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள ஊர் சாவடிகளில் எதைக் காண்கிறாேம்? வேம்பு அதற்கடியில் சிறுகல் அதற்குத் திருவிழா, காெண்டாட்டம்! இப்படித் தானே!நேரமும் நினைப்பும் பாழாகிக் கொண்டு வருகிறது. இதற்கு பதில், இந்த வீண் விழாக்களால் செலவழியும் தொகையைக் கொண்டு ஏன் அந்தச் சாவடிகள் யாவும் பொது அறிவு பரப்பும் முதியோர் கல்விச் சாலைகளாக மாரக் கூடாது!

கிராமத்து மக்களுக்கு இந்தியாவின் அகல நீளம் தெரியுமா? அது கூட வேண்டாம், சென்னை மாகாணத்தில் வாழும் மக்கள் தொகைதான் தெரியுமா? இதையெல்லாம் அவர்கள் அறிந்து கொள்ள, ஆளுக்கொரு பூகோளப் புத்தகம் வாங்கித்தர நேரமுண்டா அல்லது அதற்கான நிதிதான் இருக்கிறதா? அல்லது இந்த சர்க்காரால் தான் முடியுமா?

ஆகவே அவர்களுக்கு இது பற்றி யெல்லாம் விளக்கி பொது அறிவுள்ளாேர்களாக்க, கிராமக் கண்காட்சிகள் - இந்த வகையில், மிக மிகப் பலன் தரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/20&oldid=1502018" இலிருந்து மீள்விக்கப்பட்டது