பக்கம்:அன்பின் உருவம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பின் உருவம்

13

கிறார். அது அன்பின் அறிகுறி. ‘எத்தனையோ பேர்களைப் பார்த்துப் பல செயல்களைச் செய்யும் நீ எளியேனையும் கண்டு உனக்கு அடியனாகக் கொள்ளவேண்டும் அப்பா!’ என்று சொல்கிறார். அவர் அவன் தான் தன்னை உடையவன் என்று கண்டு கொண்டார். அவனுடைய உடைமையே தாம் என்பதையும் கண்டு கொண்டார். உடையவன் தன் உடைமையை மறந்திருக்கலாமா? ‘இதோ உன் உடைமை இங்கே இருக்கிறது. இதைக் கண்டு கொள்’ என்று தம் அடிமை நிலையையும் இறைவனுடைய உரிமை நிலையையும் உணர்ந்து பேசுகிற பேச்சு, ‘உடையாய்! என்னைக் கண்டு கொள்’ என்னும் பேச்சு.

*

மெய்தான்அரும்பி விதிர்விதிர்த்து
உன்விரை ஆர்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழ விடேன்உடை
யாய்!என்னைக் கண்டுகொள்ளே.

[உடம்பில் புளகம் அரும்பி, நடுங்கி, உன்னுடைய மணம் நிரம்பிய திருவடிக்கு என் தலையின்மேல் கையை வைத்து வணக்கம் புரிந்து, கண்ணீர் ததும்பி, உள்ளம் வேதனையினால் புழுங்கி, பொய்யான பற்றையும் உணர்ச்சிகளையும் நீங்கி, உன்னை வணங்கி, 'வெல்க வெல்க! போற்றி' என்னும் ஒழுகலாற்றைச் சிறிதும் தளர விடமாட்டேன் அடியேன். உடையவனே! என்னை இவன் நம் அடியான் என்று கண்டு அறிந்து என்னை ஏற்றுக் கொண்டருள்.