உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இரண்டு வழிகள் 31

சென்று இன்ன செயல்களே கான் செய்யவில்லையே சாகு மாறே விரைகிறேனே! என்று இரங்குகிரு.ர். அவரே இரங்கும்போது மற்றவர்கள் போகும் போக்கு என்ன?

    ஆமாறு உன் திருவடிக்கே
         அகங்குழையேன் அன்புஉருகேன்;
    பூமாலே புனேந்துஏத்தேன்; -
         புகழ்ந்துரையேன்; புத்தேளி
    கோமான் நின் திருக்கோயில் -
         துகேன் மெழுகேன் கூத்தாடேன்;
    சாமாறே விரைகின்றேன்,
         சதுராலே சார்வானே.
    (தேவர்களின் தலைவனே ஆக்கம்பெறும் வண்ணம் உன் துடைய திருவடியை எண்ணி அதன் பொருட்டு என் உள்ளம் குழைந்திலேன்; அன்பினுல் கான் உருகவில்லை; மலர்மால்களைக் கொண்டு உன்னே அலங்காரம் செய்து துகிக்கவில்லை. புகழ்ந்து பாராட்டவில்லை; கின் திருக்கோயிலைப் பெருக்கவில்லை; மெழுக வில்ல்ே; ஆனந்தக்கூத்து ஆடவில்லை; என் அறிவுத் திறத்தால் சென்று சேரும்பொருட்டு மரண வழியிலே வேகமாகச் செல்லு கிறேன்.

புனேந்து - அணிந்து. எத்தேன்-துதித்திலேன். புத்தேளிர். தேவர். தாகேன் -பெருக்கவில்ல்ே, சதுர் - சதுரப்பாடு; சாமர்த் கியம். சார்வான் - சாரும் பொருட்டு.)