பக்கம்:அன்பின் உருவம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'62 அன்பின் உருவம்

தில் இருக்கிருர்கள். அவர்கள் வாழும் உலகம் பதின்ைகு உலகங்களின் அடுக்கில் மேலே இருப்பது. வான நாட்டில் வாழ்கிறவர்கள் அவர்கள். அவர்களால் நமக்கு மழை கிடைக்கிறது: தீக்கிடைக்கிறது; காற்றைப் பெறுகிருேம், இப்படியிருந்தும் நாம் அவர்களேக் காண முடிவது இல்லை.

இறைவன் தேவலோகத்தையும் விட உயரத்தில் இருப் பவன். இவ்வளவு உபகாரிகளாகிய தேவர்கள் இறைவ லுடைய அருளினல்தான் ஏனையவர்களுக்கு நன்மை செய் யும் நிலையில் இருக்கிருர்கள். நாம் வாழும் காட்டில் போலீஸ்காரன் நம்மைப் பாதுகாக்கிருன் தண்ணிரைப் பாதுகாக்கும் அதிகாரிகள் தண்ணிர் விடுகிருர்கள்; சாலையை அமைக்கும் வேலைக்காரர்கள் சாலை போடுகிருர் கள். இப்படிப் பல வகையில் தொண்டு செய்கிறவர் களுடைய செயல்களால் மக்கள் நல்ல வாழ்க்கையைப்பெறு .கிருர்கள். போலீஸ்காரர் முதலியவர்கள் தாமாகவே தம் வேலையைச் செய்வதில்லை, அரசாங்கத்தில் ஊதியம் பெற்று அதன் ஆணேக்கடங்கி நடக்கிருர்கள். நல்லவர்களாக இருந்தால் கரும்பு தின்னக் கூலி கிடைத்ததே என்று மகிழ்ச்சியோடு தங்கள் வேலையைச் செய்வார்கள். இல்லை -யானல் வாங்குகிற சம்பளத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அப்படி உழைப்பார்கள். பொல்லாதவர் களாக இருந்துவிட்டால் கிடைக்கும் சம்பளம் போதா தென்று லஞ்சம் வாங்கி, மக்களுக்கு இன்பம் விளைவிப் பதற்கு மாருகத் துன்பம் உண்டாக்குவார்கள். தேவர். கள் தம் கடமையை உணர்ந்து இறைவன் ஆணேயின் வழி நடந்து உலகுக்கு உபகாரம் செய்கிற்வர்கள்.

அதிகாரிகள் அரசாங்கத்தை மறந்து தாமே தம் மனம், போனபடி நடந்தால் அராஜகம் உண்டாகும். அப்

போது அவர்களே அரசாங்கத்தார் கடுமையாக ஒறுப் பார்கள். அப்படியே தேவர்கள் சில சமயங்களில் செருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/68&oldid=535490" இலிருந்து மீள்விக்கப்பட்டது