பக்கம்:அன்பின் உருவம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒான நாடகம் 69

உருகி நான்உனைப் பருக வைத்தவா! (பருக வைத்தவா - பருகவைத்தவாறு என்னே!)

2ன் நாடகம் ஆடியது ஒரு கிலே. பிறகு உருகி இறை வனே ப் பருகும் கிலே அடுத்தது. இப்போது அப்படிப் பருகி அமைதி பெற்று கிற்கிருர். இப்போதும் அவர் பேசு கிருர், கினேக்கிருர், செயல் செய்கிரு.ர். இவை யாவும் ஞானமணம் வீசுகின்றன. உண்மையான இன்பத்தில் அமைந்தனவாக இருக்கின்றன. இப்போது உடம்புக்குத்

தலைமை போயிற்று; உள்ளத்துக்குத் தலைமை போயிற்று;

உயிருக்கும் தலைமை போயிற்று. உயிர் இத்தகையது, அதனை ஆட்கொண்ட தலைவன் இத்தகையவன் என்ற ஞானம் வந்தபிறகு, அந்தத் தெளிவிலே பிறந்த செயல் களில் நான் என்பது இல்லை; எனது என்பதும் இல்லை. ஞானத் தெளிவில் பிறக்கும் உரையும் கினைப்பும் செயல் களுமாக வாழ்க்கை அமைந்துவிட்டது. அன்றும் உலகில் வாழ்ந்தார். இன்றும் உலகில் வாழ்ந்தார். ஆனல் அன்று உலகத்தில் அவர் கரைந்துகின்ருர்; இன்ருே அவருக்குள் உலகம் கரைந்துவிட்டது. அன்று அஞ்ஞானத்தால் ஊன் கூத்தாடியது; இன்று ஞானந்தான் கின்று நிலவுகிறது. அன்று கடந்தது ஊனின் நாடகம் அல்லது அஞ்ஞான நாடகம்; இன்று நடப்பது ஞான நாடகம், ஞானம் தலைப் பட்டவுடன் உலகத்தில் இருந்த இச்சைகளெல்லாம் கைந்து ஒழிந்தன. ஊனின் நாடகத்தில் இச்சையே குத்திரமாக இருந்தது. இன்று அது அறுந்துவிட்டது. ஞான சாட கத்தில் அதற்கு வேலை இல்லை. - - - . . . . . .

இந்த ஞான நாடகம் ஆடும்படி பண்ணியதும் இறை வன் திருவருள்தான். இதற்கு முன் நிகழ்ந்தவற்றை விட

இதுதான் பெரிய ஆச்சரியம்.