பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 34


போட்டோ ஒண்னு காட்டப் போறேன் ?”


குலோத்துங்கன்-மேகலை இருவரின் அந்த நாளைப் புகைப்படத்தைக் குலோத்துங்கனிடம் கூட நீட்ட ஒப்பாமல் பத்திரமாகத் தன் கைப்பெட்டிக்கடியில் ஒளித்து வைத்திருந் தாள். இது என்ன படம் இது என்ன புதுக்கூத்து ?


நேத்திரங்கள் ஜோடியாக மோடி செய்தன. மோடி’ எடுக்கத் தெரிந்த மந்திரவாதி மாமல்லன். அவள் பினங் கினாள். அவன் சிணுங்குவானா, என்ன ?


பறிக்கப்பட்ட பூவானது படம். பார்வை விளிம்பில் அது கிளித்தட்டு சுற்றியது. அந்தப் புகைப் படத்தில் அவன் இருந்தான், அத்துடன் குமரி ஒருத்தியும் இருந்தாள். பள்ளி நாட்களிலே நாடக விழாவின்போது எடுக்கப்பட்ட படம்,


கைவசமிருந்த இந்த நிழற்படமும், மனத்திலிருந்த அந்தப் படமும் மனச்சாட்சியின் முதுகில் அடித்த உதை நெஞ்சில் உறைத்தது. எப்போதோ எடுக்கப்பட்ட இது மேகலையிடம் எப்படி வந்தது ? என்னிடம் காண்பிக்கக் காாணம் என்ன ?. மறைத்து வைத்த இவளுடைய படத்தைப் பற்றி இவள் அறிந்து கொண்டு விட்டாளென்று அர்த்தமா ? - என்ன அனர்த்தம் இது ?- எண்ணிக் கொண்டேயிருந்திருப்பான் அவன்.


அவள் அனுமதிக்கவில்லை. என் தோழி மாதவி கொடுத்தாள், வட நாட்டிலேயிருந்து போன வாரம் வந்தாள். வீட்டுக்குப் போயிருந்தேன். கல்யாண விவரத்தைக் கேட்டாள். பெயரைச் சொன்னதும், இந்தப் படத்தை எடுத்தாந்து காட்டி இவர்தானே ‘ன்னு கேட்டாள். நான் ‘ம் கொட்டினேன். -மேகலை !