பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$39


அவன் எங்கோ சென்று விட்டானாம். அனேகமாக சென்னைக்குத்தான் வந்திருக்க வேண்டுமென்பது அவள் அபிப்பிராயம் கண்களில் தட்டுப் பட்டால் அழைத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளும்படி மாமல்லனை வேண்டியிருந்தாள். அவளும் இங்கே வந்து விடுவாளாம் !


விடி வெள்ளி உதித்த வேளை. மனத்தில் அமைதியின்றி பழைய சம்பவங்களை நினைத்துக் குழம்பிய மாமல்லன் கனவொன்று கண்டான். மேகலையுடன் குலோத்துங்கன் ஒரே படுக்கையில் இருப்பதாக அமைந்திருந்தது அக்கனவு விழுந்தடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். உயிர்ச் சக்தியே அற்றுப் போய்விட்டது போன்ற உணர்வில், இருந்தவனை காலைப்பொழுது மட்டுந்தானா வரவேற்றது. அல்ல, குலோத்துங்கனும் சேர்ந்தல்லவா வரவேற்புரை மொழிந்தான் !