#8%
புன்னகையின் நெளிவுடன் உபசரித்தாள் மேகலை.
குலோத்துங்கன் காப்பியை அருந்தவில்லை, தாடியும் மீசையுமாக காணப்பட்ட அவன் மேகலையையே இமைக் காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
மேகலை மார்புச் சேலையை சீர்படுத்தியவாறு குலோத்துங்கனை நெருங்கினாள். அவள் கையிலிருந்த காப்பித் தம் ளரை தன் கையினால் தொட்டுப் பிடித்துக்
கொண்டு 1'ம் சீக்கிரம் குடியுங்கள். ஆறிவிடப் போகிறது !’
குலோத்துங்கனின் கைகள் நடுங்கின. மேகலை
அவனுடைய வலது கையைப் பற்றிய வண்ணம், ‘விஷமல்ல இது, தைரியமாகக் குடியுங்கள் ‘ என்றாள், அளவில்லாத வாஞ்சையுடன்.
மேகலை !’
குலோத்துங்கன் காப்பி குடித்து முடிந்ததும், தம்ளரை தரையில் போட்டாள். பிறகு குலோத்துங்கனின் டைரி, புகைப்படங்கள் எல்லாவற்றையும் அவன் முன்னே வீசினாள்.
குலோத்துங்கன் நின்ற இ ட த் தி ல் பூகம்பம் உண்டாயிற்றோ ? இந்தப் போட்டோவைப் பாருங்கள்!” என்று வேண்டி, புதிய படமொன்றை நீட்டினாள்.
பிறந்த மேனியுடன் நின்றவாறு காட்சியளித்த பெண் குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்த்தான் குலோத்துங்கன், அவன் முகம் வியர்வையால் நிரம்பியது, நேத்திரங்கள் விழிப்புனலால் நிரம்பி வழிந்தன.
.ஐயா இந்தப் படத்தைப் பார்த்தீர்களா ?’
“፳፩