பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


‘நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிப்பாய் ?


“கன்னிமரா நூல் நிலையத்துக்குப் புறப் பட்டான் மாமல்லன். அந்த மாதத்தில் அவன் எடுத்துக் கொள்ள உரிமை கொண்ட விடுமுறை நாள் ஒன்று எஞ்சி நின்றது. கடற்கரை ரெயில் நிலையம் அவன் குறிப்புக்கு எல்லைக் கல்லானது. வீட்டை விட்டு நடந்து இருபது இருபத்தைந்து அடி தூரம் நடந்திருப்டான். தீனக் குரலொன்று காற்றில் அலைந்து வந்தது. அது அவனிடம் ஒரு சேதி சொன்னது, தெருவின் கோடியில் அவன் நின்றான்.


“சிந்தாமணி ஏன் அழுகிறாள் ?”


ஒரு கேள்வியிலிருந்து பத்துக் கேள்விகள் உதிர்ந்தன.


“என் அன்புக்குகந்த மேகலை மாதிரி சிந்தாமணியும் தங்கமான பெண், தங்கமான ம ப் பி ஸ் ைள கிடைக்க வேண்டும். ஏழைத் தொழிலாளியின் மகள்! வட துருவத்தில் நின்றால் அவன்.


அதே சமயத்தில், தென் துருவம் கூவிக் கூவி அழைத் தது. திரும்பியபோது, இரவில் கண்ட சிந்தாமணியின் புகைப் படமும் நினைவுக்கு வந்தது. விளக்கம் கேட்க வேண்டுமென்றிருந்தான் அன்னையிடம் மறந்துபோனான். “படிக்க எடுத்துச் சென்றிருப்பார்கள். சரி ஒரு வேளை, அவர்கள் தன் போட்டோவை மறந்து போய்ப் புத்தகத்தில் வைத்திருப்பார்களே? அப்படியானால் மேகலைக்கு எழுதிய


‘தபாலில் சேர்க்கப்படாத அக்கடிதத்தையும் பார்த்திருப் பார்களே!