பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 3


‘நல்லது செய்து நடு வழி போனால், பொல்லாதது போகிற வழியேபோய் விடும் என்பது மாமல்லனின் சித்தா நீ தம். ஆனால் அன்றைக்கு என்னவோ அவன் நினைப்பு நல்ல பலன் காட்டவில்லை, நடு வழியே சென்றவன் நல்லது செய்தான். ஆனால் பலன் நல்லதாக உருப்பெறவில்லை


டாக்டர் தன் மண்டையை உருட்டிக் கொண்டார். வெளிப்படையாக, இளைஞனின் தலையை உருட்டி


விட்டார். ரகசியமாக, ரத்த இழப்பைக் காட்டிப் பயமுறுத் தினார். சிந்தாமணி பயந்தாள்.


“ஐயோ நான் அபலையாகி விடுவேனா ஆண்டவனே என்னை அனாதை யாக்கி விடாதே, தாய் இல்லாப் பெண்ணுக்குத் தகப்பனையாவது ஆதரவுக்கு விட்டு வைத்து வீடு, மலை ஏறிவந்து உனக்கு அர்ச்சனை செய்கிறேன்...’ மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையா:கர வேண்டினாள் சிந்தாமணி.


பூரணமாகத் தேய்ந்து விட்ட இசைத் தட்டின் மெலிந்த ஒசையைவிட மோசமாகயிருந்தது துறைமுகத் தொழிலாளி வேலாயுதத்தின் கூப்பாடு.


ஒடினவள் மகள். நெற்றிமேட்டில் கை வைத்துப் பார்த் தாள். தந்தையின் கண்ணிர்த் துளிகளைத் துடைத்து, அவற்றைத் தன் விழிகளில் நிறைத்தாள் மகளின்முகத்தைத் தடவிக் கொடுத்தவாறு ஏதோ பேச எண்ணியவராக கிழவர் வாயை அசைத்தார். அழுகைதான் புறப்பட்டது, வார்த்தை களை அல்லவா அவள் எதிர்பார்த்தாள் :


பெண் தன் கண்களுக்குக் கறுப்பு மையிட்டால் பார்க்கப் பரவசம் தருகிறது. ஆனால் வான மடந்தை இம்மாதிரி


மை பூசிக் கொண்டால், ஏன் உலகம் அப்படிப் பயந்து சாகிறதாம் ?


‘அம்மா...அம்மா! ‘