பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அந்தத் துயரச்செய்தி,அந்த எள்ளத்தனைப் பொழுதில் அவன் காதுகளில் ஒலித்தபோது,மண்டை வெடித்துச் சிதறியது. நெரித்த திரைகடலில் என்ன கண்டானே? இல்லை, நீல விசும்பினிடை என்ன கற்பனை தோன்றியதோ?

“மேகலை! அப்படியென்றால் நம் பால்யக் கனவு பாழாகி விட வேண்டியது தானா?” என்று தன்னை மறந்து ஓலமிட்டுக் கொண்டிருந்தான் மாமல்லன்.