பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரை இராசூழ


துரை. இராமு பதிப்பகம்


தாம்பரம்.


1—11—92.


பதிப்புரை


தன் எழுத்துப் பணிக்க அரசு பரிசுகள் முதலிட்ட பல பரிசுகள் பெற்றிருந்தாலும் மிக அடக்கமானவர் ; பல வார மாத இதழ்களோடு தொடர்பு கொண்டிருந்த போதிலும் எளிமையையே நாடுபவர் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர் வாசகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏமாற்றம் அளிக்காதவர் ; இனிய செட்டிநாட்டு வழக்கு மொழியில் தன் கருத்துக்களை எல்லோரும் ஏற்கும் வண்ணம் எழுதுபவர் ; இவர்தான் இந்நூலாசிரியர் திருமிகு பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள்.


‘அன்பு பெருகினால் சாதாரண செயல்களும் பெருமை மிக்கவைகளாக விளங்கும் , அன்பைப் போன்று பெருகி வளர்வது வேறொன்றும் இல்லை ; பெண்களின் அழகைக் காட்டிலும் அவர்களுடைய அன்பே காதலை வளர்க்கிறது; காதலுக்கு கண் இல்லை என்பது பொய் மட்டுமல்ல; மேன்மையான அதற்கு அவதுாறை விளைவிப்பதாகும் ; உண்மைக் காதலை நம் கண்களால் காண்பதில்லை; அதனை மனத்தால் காண்கிறோம். ‘ இன்னும் இவை போன்ற பலகருத்துக்களை மையமாக்கி அன்புத்தாய் மேகலை’ யை உருவாக்கியுள்ளார். இந்நூலில் ஆசிரியர் தன் உணர்வு களையும் பல இடங்களில குவியலாக்கியுள்ளார்.


இந்த நல்ல நூல் வாசகர்களிடையே நல் ஆதரவைப் பெறும் ; பெறவேண்டும் என விழைகிறேன். இத்தகைய ஒரு சிறந்த நூலை எங்கள் பதிப்பக வெளியீடாக வெளியிடு வதில் பெருமையடைகின்றேன்.


- அன்புள்ள


துரை. இரா.மு பதிப்பக உரிமையாளர்.