64
காத்திருப்பதாகவும் மாமல்லன் அறிந்தான். பரபரவென்று எழுந்தான், சண்முகத்தைத் தொடர்ந்தான்.
ஈரம் காயவில்லை, சாப்பிட்ட கையின் ஈரம். “என்ன அம்மா ?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே விரைந்தான் மாமல்லன். அவனைக் கண்டதும், சற்றே விலகி நகர்ந்தாள் சிந்தாமணி,
பையன் இரண்டு தட்டுகளில் இட்லி நிரப்பிக் கொண்டு வந்தான்.
இரு தட்டுகளையும் மாமல்லன் வழி மறித்து வாங்கினான், வழி பிரித்துக் கொடுத்தான்
“சாப்பிடுங்க, அம்மா!’ என்று சொல்லி அன்னையிடம் நீட்டினான் அவன்.
‘அம்மாவோடு நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க, சிந்தாமணி! என்று அமைதியுடன் தெரிவித்தான் அவன்,
சில நிமிஷ நேர இடை நேரத்துக்குப் பிறகு, கோசலை அம்மாள் தாழ்வாரத்தில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். பச்சை நரம்புகள் நாலு தரையில் சிதறிக் கிடந்தன.
பத்திரிகையைப் பிரித்து படித்தவாறு வந்து சேர்ந்த மாமல்லன் ‘அம்மா?’ என்று கூப்பிட்டான். ஏக்கமும் துக்கமும் மண்டிய தாயின் விழிகள் மைந்தனைப் பரிவுடன் நோக்கின.
‘தம்பி, நான் இன்னைக்கு ராத்திரி வண்டிக்கே சிந்தாமணியை அழைச்சுக்கிட்டு பட்டணத்துக்குப் போறேன்,’ என்று நிறுத்தினாள் கோசலை அம்மாள்.