பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65



எதிர்பாராத நிகழ்ச்சிகள் தடக்கக் காணும்போது, உள்ளத்தில் அதிர்ச்சி விளைவது இயல்பு, நம்மை நாமே மறந்து விடுவோம் ஆனால் எதிர்பார்த்த சம்பவங்கள் ஒன்றிரண்டு எதிர்பார்த்தபடியே நிகழுகையில், அப்போது இதயத்தில் ஏற்படும் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ வேதனையோ அளவில் - பலத்தில் குறைந்தே இருக்கும்,


மாமல்லன் தன் அன்னையின் மனத்தை நாமே நன்கு உணர்ந்தவன். அவள் பெற்ற பிள்ளை இவன். சென்னையிலிருந்து அரியலூர் மண்ணை மிதித்து அங்கு தங்கிய முதல் நாள் முடிந்தது; இரண்டாவது நாள் பிறந்திருக்கிறது. இதற்கிடையில் அவள் தன் தமையனார் வீட்டுப் பச்சைத் தண் ணிரைக் கூட பல்லில் வைக்கவில்லை.


‘அண்ணா, நீங்க இப்படி செய்வீங்கன்னு துளிகூட எதிர்பார்க்கலை சொந்தமும் ரத்தமும் விட்டுப் போகாமல் இருக்கும்னு நினைச்சிருந்தேன். நீங்க இவ்வளவு காலம் சொல்லிக்கிட்டிருந்த பேச்சையும் நிஜம்னு நம்பிக்கிட்டிருந் தேன். ஊரிலே உலகத்திலே இருக்கிறவங்க மாதிரி என் மகனும் அவனுக்குப் பிடிச்ச உங்க மகளைக் கல்யாணம் காட்சி செய்துகிட்டு சுகமா இருக்க வேணும்னு நிதம் கடவுளை வேண்டிக்கிட்டிருந்தேன். ஆனா இப்பிடி நீங்க சிரிச்சுச்சிரிச்சு கடைசியிலே என் கழுத்தையே அறுத்துப் பிடுவீங்கன்னு கனாக்கூடக் காணலை நல்லாப் பொருத்தி யிருக்கிற ஜாதகங்களைப் பொருத்தம் சரியில்லைன்னு எதுக்குப் பொய் சொன்னிங்க ? பணம் உங்க கண்ணை மறைச்சிட்டுது, ஆனால் ரத்த பாசத்தைக்கூட முறிச்சுடுச்சே? ... என்னவோ எல்லாம் என் போதாத காலம் எல்லாம் என் தலைவிதி !


நேற்று சாயங்காலம் வீட்டில் அந்நியர்கள் இல்லாத தருணம் பார்த்து கோசலை தன் மூதத சகோதரரிடம் இவ்வாறு மனம் கொதித்துப் பேசினாள். --


அ-5