பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72



காற்று இதமாக வெண்சாமரம் வீசியது. கிழக்கு மூலையில் வத்தமர்ந்த இளம் ஜோடி ஒன்று அடுத்த ஐந்தாவது வினாடியில் புறப்பட்டது,


“அத்தான் ‘ என்று அழைத்து அ ைன ப் பூவுலகுக்குக் கொணர்ந்தாள் மேகலை.


இராம தூதன் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகை லட்சுமணனை உயிர்மீட்டெழச் செய்தது. மேகலை கொடுத்த துணிவு மொழி மாமல்லனைப் புதுவாழ்வு அடையப் பண்ணியது. அவன் அவளை உன்னிப்பாகப் பார்வையிட்டான், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் பயணத்தின் போது உருவான வைர நெஞ்சத்தையும் திறந்து நோக்கி னான். போட்டு வந்த திட்டத்தின் நகலையும் திருப்பிப் படித்துப் பார்த்தான். பொருந்தாத ஜாதகங்களின் தீர்ப்பைக் கூட மாற்றியெழுதிவிட வேண்டுமென்ற குறிக் கோளுடன் வந்தவனுக்கு விதியின் நல்லவாக்கு எதிர்பாரா மல் கிடைக்கவே, பழைய தைரியத்துக்கு இப்பொழுது வல்லமை அதிகமானது. ‘மேகலையுடன் இங்கிருந்து வெளியேறி, தேதி குறிக்கப்பட்டுள்ள அதே சுப தினத் திலேயே மேகலையின் கழுத்தில் மூன்று முடிச்சுப்போட்டு விடவேண்டும், என்பது அவனது அந்தரங்கம் என் வாழ்வின் நிலையே நீங்கள்தானே, அத்தான் ‘ என்று கடிதத்துடன் கேள்வியையும் தூது அனுப்பிய சித்திரப் பாவை அவனுக்கு நம்பிக்கையூட்டிய தெய்வமாகத் தோன்றினாள். மேகலைக்கு எழுதப்பட்டு, ஆ ை ல் அனுப்பாதிருந்த கடிதத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் படித்தபின் அதை மேகலையிடம் கொடுத்தான். அன்று கடிதத்துக்குக் கட்டிக்கொண்ட எல்லை இன்று காதலின் வெற்றித் தளத்தை எட்டக்கூட வலுவிழந்தது. அவனால் அழைக்கப்பட்ட ஆணிப்பொன்’ இப்பொழுது அவனுடைய பலத்தை அறிய உதவியது.