பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77



‘ம்’ கொட்டி விட்டுப் பிரிந்தான் மாமல்லன். ஒரு முறை மெரினா கடற்கரையில் கேட்ட சிலம்புச் செல்வரின் சொற்பொழிவு நெஞ்சில் ஓடியது. பூங்காவில் மேகலையிடம் பேசிக் கொண்டிருக்கையில் அந்தச் சொற்பொழிவின் சாரத்தை எடுத்துக் காட்டியதையும் அவன் எண்ண மிட்டான்.


“மாசு அறு பொன்னே ! ... வலம்புரி முத்தே !


காசு அறு விரையே கரும்பே, தேனே !


அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே !’ கண்ணகியை முன் வைத்துப் புகழ்ந்த கோவன்னின் வாய்மொழிகள் மாமல்லனை கை கே:ர்த்து எங்கே. அழைத்துப் போயின. ஆனால் அவை இப்பொழுது அவனு


டைய மனச் சூறாவளிக்கு அரு மருந்தாக அமையச் சம்மதம் தரவில்லை...!


மாமல்லன் இரவுச் சாப்பாட்டுக்கு அழைக்கப் பட்டான். விரிந்து கிடந்த செய்தித் தாளில் அவன் பார்வையைத் திருப்பினான். காதலித்த ஒர் இளைஞ னுடன் தொடர்ந்து சென்றாள் யுவதி ஒருத்தி, கோபம் கொண்ட பெண்ணின் தந்தை ஆண் பிள்ளை மீது வழக்கு தொடுத்தாராம் சட்டம் இளைஞனுக்கே சாதகமாக அமைந்ததாம், பத்திரிகைச் செய்தி அவனுக்குத் தெம்பையும் யும் தெளிவையும் சிறுகக் கொடுத்தது. மறு பக்கம் புரட்டலானான். காதலித்த பெண்ணை eg}® L. tl ! முடியாததால், மனமொடிந்து போய் விட்ட குலோத்துங்கன் என்ற பெயருள்ள ஒரு யுவன் சித்த சுவாதீனம் தப்பிய சென்னைத் தெருக்களிலுள்ள சுவர்களில் காதலியின் உருவத்தைக் கிறுக்கிக் கொண்டு திரிகிறானாம். இமைப் பொழுதுக்குள் தெம்பும் தெளிவும் யாத்திரை போய் விட்டன. மறுபடி புயல், பூகம்பம், ಛಿrflues) ಇಳಿ ! பத்திரிகையைத் தூர விசிறி யெறிந்தான் அவன்.