பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தன் 99 "ஆம், கான் கண்ட காதல் துறை இதுதான்!” என்ருர் ரீமான் லங்கேஸ்வரன் அழுத்தந் திருத்த i f} si 3G, அந்தத் துறைக்குத் தாங்கள் தனி நாயகமாய் கின்று விளங்கும் காரணம் யாதோ?”

அதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை!”

அப்படிப்பட்ட மன்மதக் கலையோ, அது? அந்தக் கலையை மாற்ருன் மனைவியின் மீதுதான் பிரயோகிக்க வேண்டுமோ?’’ அவ்வளவுதான்; உனக்கென்னடா தெரியும்? என் அநுபவமும் சித்தாந்தமும்?-காலிப்பயலே!” என்று உறுமினர் பூரீமான் லங்கேஸ்வரன்.

துள்ளாதீர் பெரிய மனிதரே, துள்ளாதீர்!-உம் முடைய அநுபவம், உம்முடைய அயோக்கியத்தனம், உம்முடைய சித்தாந்தம் உம்முடைய சீர்கேடு யாவும் என் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதை அம்பலப்படுத்தத் தயாராய் இருக்கிறேன்” என்று விரல்களைச் சொடுக்கிக்கொண்டு அவருக்கு முன்னல் கின் ருர் என் அத்தான்.

இைருந்தால் என்னடா செய்துவிடுவாய்?” என்று அவருடைய கன்னத்தில் அறைந்தார் ரீ மான் லங்கேஸ்வரன். அவ்வளவுதான்; வாங்கியதைத் தி ரு ப் பி க் கொடுத்ததோடு மட்டும் கிற்கவில்லை என் அத்தான். புரீமான் லங்கேஸ்வரனின் காலரைப் பிடித்து இழுத்து முகவாயில் ஒரு குத்து விட்டார். குத்தின வேகத்தில் அவர் விழ அத்தானும் விழுந்தார். ඕG