பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அன்பு அலறுகிறது

வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கைவிடுவார்கள்!”

"இதில் வேடிக்கை என்னவென்ருல் அவர் என்னைக் கைவிடவில்லை, நான்தான் அவரைக் கைவிட்டேன்!”

"சரி, முந்திக்கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறது!”

"இத்தனைக்கும் நான் யார், தெரியுமா? இன்னுெருவருடைய மனைவி!"

"அடி சக்கை, காதலில் புதுமையும் புரட்சியும் வேண்டுமானல் இன்னொவருடைய மனைவியைத் தான் காதலிக்க வேண்டும் என்று அந்த எழுத்தாளர் தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது!”

"அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர்கள்? கார் விபத்தில் என் கணவர் தம்முடைய ஆண்மையை இழந்தாலும் இழந்தார், என்னுடைய பெண்மையைத் தன்னுடைய ஆண்மைக்குப் பலி கொள்ளத் துணிந்து விட்டார் அந்த எழுத்தாளர்!"

"அதைவிடப் புதுமை இது, அதைவிடப் புரட்சி இது!"

"அது மட்டுமல்ல; 'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனன்றோ ஆன்ற ஒழுக்கு!' என்று நம் வள்ளுவர்பெருமான் சொன்னாரல்லவா, அந்தப் பேராண்மை, 'பிறன்மனை நோக்குதலே' என்று அவர் எண்ணிவிட்டார்!"

"அட கடவுளே, எண்ணத்தில் ஏற்பட்ட புரட்சியும் புதுமையும் எழுத்திலும் ஏற்பட்டுவிட்டதாக்கும்!"