பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன. 149 அதற்கேற்றற்போல, பார் லலிதா, பார்! அன்பு அலறுகிறது! பார் லலிதா பார்!’ என்று கொக்கரித் துக்கொண்டே என்னை நோக்கி வந்தான் என் அத்தான். 6. எவ்வளவோ கோழையாயிருந்த உ ன க் கு என்லைல்லவோ இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது!’ என்று சொல்லிக் கொண்டே அவன் வீசிய கத்தியை எடுத்து நான் அவனை நோக்கி வீசினேன். குறி தப்பவில்லை; சாய்ந்தான் கீழே! அதற்குமேல் கான் தாமதிக்கவில்லை. ரத்தக்கறை படிந்த கையால் ஒரு கடிதம் எழுதினேன்-அந்தக் கடிதம் இதுதான்: வாழ்கின்ற - வாழப்போகிற ஜீவன்களையெல் லாம் அணைகின்ற-அணையப் போகின்ற ஒரு ஜீவன் அன்போடு வேண்டிக்கொள்வது என்னவென்ருல், உலகத்தின் கன்மைக்காக ஒழுக்கத்தின் வளர்ச்சிக் காக அன்பின் பெருக்குக்காக பண்பின் சிகரத்துக்காக -நீங்கள் அன்புப் பணிபுரிய முன் வரவேண்டாம! ஏனெனில், அன்புக்குப் பிரசாரம் தேவை இல்லை! பார்க்கப்போல்ை அன்பின் எல்லை மிகக் குறுகியது. மிக நுண்ணியது. மற்றதெல்லாம் கட்பு; அதற்கும் எல்லை உண்டு. அந்த எல்லேயை மீறில்ை இன்பமில்லை; துன்பமே! கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள இதயப்பிணைப்பாயிருந்தாலும் சரி, தாய்க்கும் மகனுக் கும் இடையே உள்ள பாசப் பிணைப்பாயிருந்தாலும் சரி-கைம்மாறு கோராமல், கைம்மாறு எதிர்பார்க் காமல் இன்ப துன்பங்களில் பங்கேற்று வாழும் முறை இயற்கையானது; எந்தப் பிரசாரத்தின் விளைவாலும் ஏற்பட்டதல்ல. அ.-10