பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

31

வில்லை; கல்யாணம் செய்து கொள்ளவில்லை. காதலுக்கு நான் கொண்ட பொருள் வேறாயிருந்ததால்!

ஆம், காலத்தால் உடல் பாதிக்கப்பட்டாலும் உள்ளம் பாதிக்கப்படாத காதலையே நான் விரும்பினேன். அந்த விருப்பம் என்னைப் பொறுத்தவரை அன்று நிறைவேறி விட்டதென்றே நான் நினைத்தேன்.

ஆனால் குறும்பு மிக்க என் தோழிகளின் ஆசை விழிகளுக்குத் தோற்றமளித்ததுபோல் அவர் என்னுடைய அன்பு விழிகளுக்குத் தோற்றமளிக்கவில்லை. அவர்கள் சொன்னது போல் அவருடைய கையில் தடியும் இல்லை; முப்பத்திரண்டு பற்களில் மூன்று பற்கள் காணாமற் போய்விடவும் இல்லை!

எது எப்படியிருந்தால்தான் என்ன? என்னுடைய லட்சியத்தை இப்போது நான் அடைந்துவிட்டேன். அந்த லட்சியத்திற்காகச் சிலர் சொல்லுவதுபோல என் உடல் வாடினாலும் உள்ளம் வாடாதன்றோ?

பார்க்கப்போனால் பிறக்கும்போதே நிர்வாணமாகப் பிறக்கும் மனிதனுக்கு ஆடை எது, லட்சியந்தானே? உள்ளத்துக்கு அவசியமாயிருக்கும் அதை உடலுக்கு அவசியமில்லை என்று அவிழ்த்தா எறிந்துவிடுவது?

அதற்கு நான் தயாராயில்லை யென்றாலும் எதற்கும் தயாராயிருந்த என் அத்தான் என்னை விரும்பினார். கல்யாணத்துக்கு முன்னால் மட்டும் விரும்பவில்லை; பின்னாலும் விரும்பினார். நனவில் மட்டும் விரும்பவில்லை; கனவிலும் விரும்பினார்.

அந்த இழவெடுத்த கனவைக் கல்யாணத்தன்றாவது அவர் காணாமல் இருந்திருக்கக்கூடாதா?- கண்டார்;