இதுவா, இது என் ஆசை அத்தான்!" என்றேன் நான்.
"ஓஹோ, அப்படியானால் இவரும் நம்முடன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கலாமே?" என்றார் அவர்.
"அதெப்படி உட்கார முடியும்? உரியவர்கள் சொல்லாமல் என்னிடம் அப்படி யெல்லாம் உட்காரும் வழக்கம் கிடையாது!" என்றது என் அத்தான், தனக்கே உரித்தான அசட்டுக்களையுடனும் அழுத்தந் திருத்தத்துடனும்.
"ஆமாம்; இது உரியவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் உட்கார்ந்தாலும் உட்காருமே தவிர சொல்லிக்கொண்டு உட்காரவே உட்காராது! என்றேன் நான்.
இதைக் கேட்டதும் ஏனோ தெரியவில்லை; என் அத்தானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. "ஹிஹிஹி, ஹிஹிஹி" என்று இளித்தது இளித்தபடி எழுந்துநின்றது.
நானும்.ஹி.ஹி ஹி,ஹி ஹி ஹி" என்று இளித்தது இளித்தபடி எதிர்த்தாற்போல் நின்றேன்.
இப்படியாகத்தானே 'ஹி ஹி ஹீ' என்று அது இளிக்க நான் இளிக்க, இருவரும் மாறி மாறி இளித்துக் கொண்டே நின்றோம்.
போலீஸ்காரருக்கு ஒன்றும் புரியவில்லை; நிலைத்தகண் நிலைத்தபடி எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவர் மெல்ல நழுவினார்.