பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

மறுமலர்ச்சி எழுத்தாசிரியர் திரு. விந்தன் அவர்கள் எழுதிய 'அன்பு அலறுகிறது' நாவல் தமிழகத்து இலக்கியப் பத்திரிகையான 'அமுத சுரபி' மாத இதழில் தொடர்ந்து வெளிவந்த போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் இலக்கிய ஆர்வத்திற்கு விருந்தாக அமைந்தது மட்டுமல்ல, இலக்கியச் சிந்தனையாளர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டு மாறுபட்ட கருத்துக்களை எல்லாம் எழுப்பிவிட்டது எனலாம்.

அப்படிப்பட்ட ஒரு சிறப்புமிக்க நாவலை புத்தக உருவில் வெளியிட உரிமை அளித்த ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.


- பிரசுரத்தார்