பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

49

அதை எச்சரிப்பதற்காக, எங்கள் காரின் கண்கள் மூடி மூடித் திறந்தன. ஆனால் லாரியின் கண்கள் மூடவும் இல்லை, திறக்கவும் இல்லை-திறந்தது திறந்த படியே இருந்தன.

திடீரென்று ஒரு வெடிச் சத்தம் இடிச் சத்தம் போல ஒலித்தது; அதைத் தொடர்ந்து லாரியின் பிடிப்பிலிருந்து விடுபட்ட 'டயர்' ஒன்று 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்ட சந்தோஷத்தில் ஆடிப் பாடிக்கொண்டே உருண்டது!

அவ்வளவுதான்; நிலைகுலைந்த லாரியைப் போலவே என் கணவரும் நிலை குலைந்தார்!

ஒன்றிலிருந்து ஒன்று தப்ப முயன்ற இரண்டு வண்டிகளும் ஒன்றிலிருந்து ஒன்று தப்ப முடியாமல் மோதிச் சாலையின் சரிவிலே உருண்டு புரண்டன!

"ஐயோ, ஆபத்து!"- இதைத் தவிர என்னால் அப்போது வேறொன்றும் சொல்ல முடியவில்லை.