பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் .63 எல்லாம் அன்பை வாழ வைப்பதற்காக லலிதா, எல்லாம் அன்பை வாழ வைப்பதற்காக!”

  • வாழ வைப்பதற்கா, சாக வைப்பதற்கா?” எது வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் எங்கள் வாழ்வுக்கு வழி கல்யாணமானவ8ளக் காதலிப்பதில் தான் இருக்கிறது!’

கன்னியைக் காதலிப்பதில் இல்லையாக்கும்?” இைல்லை; இல்லவே இல்லை!" இல்லாவிட்டால் போகட்டும். இப்போது நீ இந்த இடத்தைவிட்டுப் போகப்போகிருயா, இல்லையா?” ஏன். போகவேண்டும், எதற்காகப் போக வேண்டும்? வரவேற்பை எதிர்பார்க்காத காங்கள்தான் பிரிவுபசாரத்தையும் எதிர்பார்ப்பதில்லையே?’’ கொஞ்ச நேரத்திற்கு முன்னல் எதிர்பாராத வரவேற்பை எதிர்பாராத விதமாக உனக்கு அளித்த கான், இப்போது எதிர்பாராத பிரிவுபசாரத்தையும் எதிர்பாராத விதமாக உனக்கு அளிக்கிறேன். போ, உடனே இந்த இடத்தை விட்டுபோ!'

ஐயோ, லலிதா உனக்குத் தெரியவில்லை; உண்மை உனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் என்னை நீ விரட்ட மாட்டாய்; உன்னையே விருந்தாக வைத்து என்னை நீ வருந்தி, வருந்தி அழைப்பாய்!”
உனக்குத் தெரிந்த உண்மை எனக்கும் தெரியும். போடா நாயே, போடா வெளியே!”

போடி, புத் தி க் .ெ க ட் ட வ வேள! உனக்குத் தெரியாது; எனக்குத்தெரிந்த உண்மை உனக்குத் தெரியவே தெரியாது!”