பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அன்பு அலறுகிறது இப்போதுதான் செவிக்கு எட்டாத அந்தச் சிரிப்பொலி என் சிந்தனைக்கு எட்டிற்று. விஷயம் என்னவென்பதை ஓரளவு புரிந்து கொண்ட நான், :யாரும் சிரிக்கவில்லை; உள்ளே வாருங்கள்!' என்று அவரை அழைத்துக்கொண்டு போய்க் கட்டிலின்மேல் படுக்க வைத்தேன். ேைகட்கிறது, அவளுடைய சிரிப்பொலி இன்னும் எனக்குக் கேட்கிறது!’ என்ருர் அவர். துைங்குங்கள்: கேட்காது!’ என்றேன் கான். கேட்காமல இருக்கட்டும் துரங்குகிறேன்!” என்ருர் அவர். ஏக காலத்தில் இரண்டும் சாத்தியமாவது எப்படி? தம்மிடம் அன்பு கொணட முதல் மனைவியின் அன்பை என்மேல் கொண்ட அன்பால் கொல்ல முடிந்த அவரால், ஆன்மாவையும் கொல்ல முடிந்தாலன்ருே சாத்தியமாகும்?