பக்கம்:அன்பு மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றுரை

5


எனக்குப் பின்னால் வேதாந்த சித்தாந்த வல்லுநரும் மிகச் சிறந்த கல்வியாளரும் இப்பொழுது மாயோகியினுடைய பிரசாரகராக இருக்கின்றவருமாகிய நம்முடைய பெரிய அண்ணா தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்திருக்கிறார்கள். இந்தச் சின்ன மலரை அவர்களுடைய கையினாலே வெளியிட்டு அருளுவார்கள். நான் மீனாட்சிசுந்தரம் என்னும் பெரியோருக்கு மனத்தில் மரியாதை வைக்கிறவன். என்னுடைய ஆசிரியருக்கும் ஆசிரியர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். அவருடைய திருநாமத்தைத் தரித்த அவர்கள் என்னுடைய சிறிய நூலை வெளியிடுகிறார்கள் என்றால் அது நல்லபேறு என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இந்த நூலை வெளியிட்டுச் சில வார்த்தைகள் சொல்லும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து சில பெருமக்கள் பேசுவார்கள். இறைவனுடைய திருவருளினாலே, சுவாமிகளுடைய ஆசியினாலே, எல்லோருடைய உள்ளமும் நிறைவு பெறும்படியாகப் பிரார்த்திக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/11&oldid=1303742" இலிருந்து மீள்விக்கப்பட்டது