பக்கம்:அன்பு மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிற்றுரை-2

ம், இங்கே அருள் உருவாய் எழுந்தருளியிருக்கும் சுவாமிகளுடைய திருப்பாத கமலங்களுக்கு என்னுடைய வணக்கத்தை முதலில் சமர்ப்பித்துக் கொள்கிறேன். தாய்மார்களுக்கும் அன்பர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இங்கே வந்து சில நேரம் நல்ல பொழுதாகப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இதற்கு முன் சில பாடல்கள் பாடினேன். பாட்டு மாத்திரம் இருந்தால் போதுமா? உரையும் வேண்டுமென்று நினைத்தேன். இட்டிலியைக் கொடுத்தால் மேலே சட்டினியைப் போடுவது போலப் பாட்டுக்கப்புறம் இந்த உரையும் இருக்கலாமென்று நினைத்தேன்.

எதைப் பற்றிப் பேசுவது என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது. எதைப் பற்றிப் பேசினால் பேச்சு இல்லாமல் போகுமோ அதைப் பற்றிப் பேசலாமென்று நினைக்கிறேன். முள்ளினால் முள்ளைப் போக்குவது போல, வைரத்தினால் வைரத்தை அறுப்பது போல, விஷத்தினால் விஷத்தை மாற்றுவது போல, பேச்சினால் பேச்சை மாற்றி விடலாமென்று பெரியவர்கள் சொல்லுவார்கள். 'பேச்சுக்கும் மௌனத்திற்கும் நேர் பகையாயிற்றே! எப்படிப் பேச்சினால் பேச்சை மாற்றலாம்?’ என்ற சந்தேகம் வரும். ஒரு முள் காலில் தைத்தால் மற்றொரு முள்ளை எடுத்து மெள்ள மெள்ள அந்த முள்ளை எடுப்பது வழக்கம். நாம் பேசுகிற பேச்சில் மேலும் மேலும் ஆசையைப் பெருக்கி அவலத்தை உண்டாக்கி மனத்தில் சுழற்சி ஏற்படுத்துகின்றது. ஒரு வகை. அப்படியல்லாமல் மனத்துக்கு அமைதியைத் தந்து, மனத்திலுள்ள ஐயப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/12&oldid=1303746" இலிருந்து மீள்விக்கப்பட்டது