அன்பு மாலே
சுற்றுவது போல உள்ள பேச்சு, என்றைக்கும் அடங் காது. முளையடித்த கயிற்றிலே பிணத்த மாடு முத விலே சர்வ சுதந்தரத்தோடு போனலும் அந்தப் போக்குக்கு ஒர் ஒழுங்கு இருப்பதுபோல, பக்தன் எப்படிப் பேசிலுைம் இறைவனுடைய சம்பந்தமாகவே இருக்கும். அவன் பேசுகிற கதைகளெல்லாம் புராண மாக இருக்கும். அவன் பாடுகிற இசைகளெல்லாம் இறைவனுடைய புகழாக அமையும். அவன் உண் ணுகிற உணவெல்லாம் ஆண்டவனுடைய பிரசாத மாக இருக்கும். அவன் கேட்கின்ற பாட்டெல்லாம் ஆண்டவனுடைய சங்கீர்த்தனமாக இருக்கும். அவன் தொடுகின்ற பொருளெல்லாம் இறைவனுடைய பிர சாதமாக இருக்கும். அவன் பார்க்கின்ற அழகெல்லாம் இறைவனுடைய அழகாக இருக்கும். ' கண்ணை மூடிக் கொள்; வாயை முடிக்கொள்; காலாலே நடக்காதே; ஒரிடத்தில் இருந்து பிராணயாமம் பண்ணு ' என்று சொன்னல் அப்படிச் செய்வது மிகவும் கஷ்டம். அதற்குப் பதிலாக, 'வாய் திறந்து நன்ருகப் பேசு: ஆனல் ஆண்டவன் கதையைப் பேசு. காதாரச் சங்கீ தத்தைக் கேள்; ஆனால் இறைவன் புகழைக் கேள். வயிறு நிரம்பச் சாப்பிடு, ஆளுல் சாதமாகச் சாப்பிடாமல் பிரசாதமாகச் சாப்பிடு. உடம்பு நிறையச் சந்தனத் தைப் பூசிக்கொள்: ஆல்ை இறைவனுடைய அபிஷேகச் சந்தனத்தை பூசிக்கொள். தலை நிறைய மலரை வைத்துக் கொள்; ஆனல் இறைவனுக்கு அர்ச்சனை பண்ணி வைத்துக் கொள். நன்ருக நடமாடு, உலாத்து இறைவ னுடைய திருக்கோயிலைப் பிரதட்சினம் பண்ணி உலாத்து' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிருர்கள். நாம் நம்முடைய கருவிகளின் வசமாகிப் பலகாலும் திரியாமல், அவற்றை நம் வசப்படுத் தித் திரிய வேண்டும். -