பக்கம்:அன்பு மாலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

19

கிரிசையில் காலன் வந்தால்
கிட்டுறா தமைப்பர் கொல்லோ?
துரிசறும் நல்லோன் ராம
சுரத்குமார் பாதம் தாழ்மின். 24

கிரிசையில் - வேலை செய்து கொண்டிருக்கையில். துரிசு - குற்றம்.

எங்கனும் நிறைந்து நிற்பான்;
யாவுமாம் உருவைக் கொள்வான்;
தங்கமாய் வெள்ளி யாகிச்
சாற்றுறும் இரும்பு மாகிப்
பொங்கிய இறைவன் தன்னைப்
புந்தியில் காணு மாறு
துங்கனாய்ச் சொல்லும் ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி! 25

பகலெலாம் வேலை செய்து
பாடுபட் டிரவில் இன்பம்
தகஉறும் மாந்தர் தாமும்
தம்முடை ஆன்மச் செல்வம்
மிகுதற்கா ஆற்றும் செய்கை
வேறுண்டோ? வம்மின் இங்கே?
துகளறும் தூயோன் ராம
சுரத்குமார் பாதம் தாழ்மின். 26

துகள் - குற்றம்.

சொல்லுதற் கில்லை யென்றே
சும்மாநிற் கின்ற மோன
நல்லவர் போற்றும் நாதன்,
ஞானியுள் ஞானி, எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/25&oldid=1303430" இலிருந்து மீள்விக்கப்பட்டது