பக்கம்:அன்பு மாலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

23


திண்ணெனும் நெஞ்ச மாயைத்
திரையெலாம் போக்கும் ஐயன்;
துண்ணென அஞ்சான்; ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!

36


இனிமையுற் றார்கள் எல்லாம்
இவன்பக்கல் வந்தே நிற்பார்;
கனிவுறு நெஞ்சர் இங்கே
காண்பதே இன்பம்; என்றும்
தனிமையும் கூட்டந் தானும்
சமமென நிற்கும் ஐயன்;
துனிதவிர்க் கின்ற ராம
சுரத்குமார் இணைத்தாள் போற்றி!

37


துனி - வெறுப்பு.


வாயினால் பேசும் சொற்கள்,
மனத்தினால் எண்ணும் எண்ணம்,
தோய்வுறு தேகத் தாலே
சுலவிய செய்கை யெல்லாம்
நாயகன் தன்பால் வைக்கும்
நன்னெறி காட்டும் ஆசான்,
தூயவ னாகும் ராம
சுரத்குமார் துணைத்தாள் போற்றி!

38


சுலவிய - செய்த.


கலைகளின் பொருளாய் நிற்கும்
கருத்தெது? பிரமந் தன்னை
அலைவிலா நெஞ்சத் துள்ளே
அனுதினம் அமைத்துப் போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/29&oldid=1303406" இலிருந்து மீள்விக்கப்பட்டது