பக்கம்:அன்பு மாலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அன்பு மாலை


தாசராய் வந்தார் தங்கள்
தாளினைப் பணியும் செம்மல்
தூசகல் கின்ற ராம
சுரத்குமார் தாளைச் சேர்மின்.

45


பின்னம் ஆம்- குறைந்து போகும், தூசு -குற்றம்.


கற்சிலை யாகி நிற்கும்
கடவுளை ஏத்திப் போற்றிப்
பற்பலர் ஏமாற் றத்தைப்
பகிர்கின்றார் எனினும் இங்கே
சற்சனர் போற்றுகின்ற
சாமியைக் கண்டால் இன்பாம்;
துற்சனர் சாரா ராம
சுரத்குமார் தம்பால் வம்மின்.

46


சாரமே இல்லாப் பூமி
தனில்வாழ்வை மெய்யென் றெண்ணிக்
காரமார் கோபம் கொண்டு
கருணையே சிறிதில் லாமல்
வீரமே பேசி நிற்பீர்,
விழலுக்கே இறைப்பீர் நீரை,
தூரமில் பெரியோன் ராம
சுரத்குமார் தன்னைச் சார்மின்.

47

தூரம் இல்- சமீபத்தில் இருக்கும்.

இன்பமும் துன்பந் தானும்
இயற்கையென் றெண்ணி என்றும்
தன்பதம் இறவா மோனத்
தனிநிலை இருக்கின் றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/32&oldid=1303412" இலிருந்து மீள்விக்கப்பட்டது