38
அன்பு மாலை
பாகை அணிந்தான், நறும்பாகு
போற்சொல் பரிந்துரைப்பான்,
ஈகை உடையான், வருவார்க்குப்
பாலை இரந்தளிப்பான்,
சோக மிலாத பெருநிலம்
காட்டிடும் தூயனிவன்
ஏகன் தனையறி ராம
சுரத்குமார் என்பவனே.
பாகை - தலைப்பாகை. நறும்பாகு - நறுமணம் வீசும் வெல்லப் பாகு,
கானத்தைக் கேட்டுக் குதுகலிப்
பான்;நற் கவிகள்சொலின்
பானத்தைப் போலப் பருகுவான்:
வேதப் பனுவல்சொலும்
ஞானத்தைச் சொல்லால் நவின்றிடு
வான். சுத்த ஞானியிவன்
தேனுற்ற சொல்லினன், ராம
சுரத்குமார் தேவனன்றே.
கானம் - இசைப்பாட்டு,
கல்லும் கரைக்கும் மொழியினன், மாந்தரைக் காசினியில்
வல்ல புலனைந்தைத் தம்நெறி போகவே வைத்திடுவான்
நல்லவர் போற்றிய நல்லவன், யாவர்க்கும் நற்குழந்தை
தம் நெறி - தமக்குரிய நல்ல வழியில்.
சேய்போல் சிரிப்பான், சிகரெட்டை
ஊதுவான். சேவடிக்கண்
யார்வந்து நிற்பினும் பொன்போலப்
பேசி இதந்தருவான்