பக்கம்:அன்பு மாலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

அன்பு மாலை

நாட்டமெல்லாம் ஒருநாட்ட மாகவந்து நின்றால்,
ஞானமிது என்பதனை நன்கு தெளி வீர்கள்;
கூட்டுமருள் வழங்குபிரான், திருவருணை மேவும்
கொள்கையினன், ராமசுரத்
குமாரென்னும் தவனே. 108


சொல்லாத மேல்நிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
துன்னுகின்ற நெறிசேர்ந்து செயல்கள் செய் யாமல்
வித்தமெலாம் வீணாக்கி நாளையுமே போக்கி
விரகறியா துழல்கின்ற மாந்தர்காள், கேண்மின்:
சித்தமெலாம் ஒருமிக்கச் செயல்இழந்து நிற்கச்
சீவன் இந்த உடம்பினிலே நிற்கின்ற போதே
அத்தனைக்கண் டுறுகின்ற ராமசுரத் குமாரை
அடைமின்கள்; இடரெல்லாம்
அடியோடே போமே. 109


வித்தம் - செல்வம், விரகு - உபாயம்.


பணம் வேண்டு மென்பவரும் பலம்வேண்டு மென்று
பயில்கின்ற மாந்தர்களும் கவலைகள் கொண்டு
குணம்மறந்த மாந்தர்களும் வந்திங்கே கூடிக்
குலவுகின்ற கவலையெல்லாம் போக்கிடுகின் றாரே;
நிணம்வேண்டும் உடல்வாழ்க்கை பெற்றதனால் இங்கே
நித்தநித்தம் கண்டதென்ன? துயரொன்று தானே?
எணம்வேண்டும் சாந்தத்தை எய்துதற்கு வேண்டின்
எழில்ராம சுரத்குமார் தம்பாலே வம்மின். 110


நினம் ஊன், எணம் - எண்ணம்.


கல்வியினால் பயனுண்டோ? செல்வத்தால் காணும்
கவின்பயன்தான் வேறுண்டோ? யாவும் இவ் வாழ்வில்
நல்வித்த மாகும்ஆம் நன்றெனினும் ஞானம்
நல்கிடுநல் வழிதனையே சேர்ந்திடுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/51&oldid=1304275" இலிருந்து மீள்விக்கப்பட்டது