பக்கம்:அன்பு மாலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

47

நவமணியால் பெருந்தனத்தால் பெரும்புகழால் நன்மை
நாமடையோம்; மெய்ஞ்ஞான போதமென்னும் சாந்தி
அவிர்கின்ற திருமனத்தான் ராம்சுரத் குமார்பால்
அடைமின்கள்; கவலையெல்லாம் கால்விட்டே ஓடும்.

114


வஞ்சநெஞ்சர் தமக்கரியான்; அன்பர்களுக் கருளை
வழங்கிடுவான்; நம்பிக்கை கொள்வோர்தம் பாலே
நெஞ்சமெலாம் நெகிழ்ந்துருகி நிற்கின்றான்; என்றும்
நிலையான பெருவாழ்வை ஈகின்ற வள்ளல்;
தஞ்சமுற அடிவணங்கும் தொண்டர்களுக் கெல்லாம்
தாயாகித் தந்தையாய்க் குருவாகி நிற்பான்;
நெஞ்சத்தில் சிறிதேனும் வஞ்சமிலா ஐயன்,
நீள்ராம சுரத்குமார் எனும்பெரியன் ஆமே.

115


சொல்லடங்காப் பெரும்புகழோன் தன்புகழைச் சொல்லச்
சொல்லுண்டோ? எல்லையுண்டோ?வரையறை யொன்றுண்டோ?
மல்லுண்ட மாயையினைப் போக்குவிக்கும் ஞானம்
வழங்குகின்ற ஞானியிவன், ராமசுரத் குமாராம்;
வில்லுண்ட அம்பென்ன வேகமுற அவன்தன்
விரையடியைப் பணிமின்கள்; ஞாலத்தில் வாழ்க்கை
அல்லுண்ட வாழ்வாக அமையாமல் நல்ல
அருள்வெளியாய் நிற்குமென அறைகின்றேன் யானே.

116


விரை அடி - மணமுள்ள திருவடி, அல் உண்ட - அஞ்ஞானத்தால் கவரப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/53&oldid=1304281" இலிருந்து மீள்விக்கப்பட்டது