பக்கம்:அன்பு மாலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

55

மனமயங்கி வேசாறிப் பொருளெல்லாம் தோன்றா
வாழ்க்கையிலே பலகலையும் அறிந்ததனால் என்னாம் ?
இனம்பலரோ டிருந்தாலும் அறிவுசிறி தில்லா
இனத்தினால் என்னபயன் உறுவர்தாம்? நம்பால்
கனமிகுத்த ஞானஉரை சொல்வாராம் என்னில்
கருணையத னால்பிழைப்போம்; ஆதலினால் இங்கே
மனமுருக்கும் வகையினிலே அருணைநகர் தன்னில்
வம்மினிங்கு ராம்சுரத் குமார் தன்னைக்காண்மின்.

138


வேசாறி - அயர்ந்து.


அலையலையாய் எண்ணமெலாம் கோடியாய் நின்றே
அலைக்கழிக்கும் புன்மனத்தைச் சாந்தியுற வைக்க
நிலையுறவே பேரின்பம் காண்பதற்கு வேண்டின்
நீங்களிங்கே வம்மின்; இந்த அருணைதனில் வந்தே
கலையுறலே சிறிதின்றிச் சாந்தியினைக் காட்டும்
கண்ணியவான் ராமசுரத் குமாரிடமே வம்மின்;
அலையுறலே இல்லாத நெஞ்சகத்தில் இன்ப
அமைதியினைக் கூடிடலாம்; இது திண்ணம் திண்ணம்.


வீட்டகத்தே இருந்திடுவான்; அதன்பின்னர்ச் சிறிதே
வெளியினிலே திரிந்திடுவான்; தேர்முட்டி யினிலே
நாட்டமுற வணங்குபவர் தமக்கரிய காட்சி
நல்கிடுவான்; சிலகாலை எங்குள்ளான் என்றே
கேட்டவரும் அறியாமல் எங்கோபோய் ஒளிப்பான்;
கிளர்கின்ற இவன்பித்தன் என்றுசொலல் உண்மை;
வாட்டமில்லா மனத்தோர்கள் வந்தடைந்தால் இன்ப
மாட்சியினைக் காட்டுகின்றான் ராமசுரத் குமாரே.

140


ஞானியர்கள் முன்னாளில் பலர்இருந்தார், இந்நாள்
நாம்காண யாருமிலை என்றுசொலல் வேண்டாம்;
மோனமுறும் மெய்ந்நிலையைக் கண்டவர்கள் இங்கே
முழுத்துறவோ டிருக்கின்றாரிறைவனருள் தனக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/61&oldid=1460017" இலிருந்து மீள்விக்கப்பட்டது