பக்கம்:அன்பு மாலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அன்பு மாலை

வளப்பெருமை மிகவேண்டிப் பலரையன்பராக்கி (போல்
மமதையினை அகந்தையினை வளர்த்துநிற்பார்; அவர்
களக்கமுறு நிலைஇல்லா மெய்ஞ்ஞானி அருணைக்
கண்திகழும் ராமசுரத் குமார்என்னும் யோகி.

212

மழைபெய்யும் போதுடலம் நனைந்துதண்மை யேறும்
வண்ணம்போல் இவன்முன்னே வந்தமர்ந்தால் உள்ளம்
விழைகின்ற அவாஅடங்க மோனநிலை தன்னை
மேவுகின்ற பதம்அறிவோம்; கைகளைத்தான் பற்றித்
தழைகின்ற அன்புடனே விழியிணையை மூடித்
தாய்போல நலம்செய்யும் ராமசுரத் குமாரை
விழைமின்கள்; அவன்இயல்பை மெய்யாக உணர்மின்;
மெய்ஞ்ஞான உருவென்னும் உண்மையினைக் காண்பீர்.


ஆலத்தை அமுதாக்கும் வண்ணம் இது என்கோ?
அயத்தினையே பொன்னாக்கும் ரசவாதம் என்கோ?
ஞாலத்தின் அழுக்கெல்லாம் போக்குகின்ற கங்கை
நதியென்கோ? மெய்ஞ்ஞானக் குன்றினிலே இவர்ந்து
சீலத்தைக் காட்டுகின்ற கதிரவனே என்கோ?
சிரிப்பென்னும் நிலவுபொழி தண்மதியம் என்கோ?
சாலத்தான் இதுவென்று வரையறைசொல் லாத
தன்மையினன் ராமசுரத் குமாராகும் யோகி.

214


ஆணவத்தைப் போக்கிடலாம்; அன்பென்னும் கடலில்
அழுக்கெல்லாம் போகும்வணம் ஆடுதலும் ஆகும்;
கோணலுற்ற நெஞ்சம்நிமிர் கொள்கையினைப் பெறலாம்;
கூட்டத்தில் இருந்தாலும் மோனநிலை உறலாம்;
வீணரைப்போல் உழலாமல் மெய்ஞ்ஞான மென்னும்
மேனிலத்தில் சாந்தியினைத் தழுவிடலும் ஆகும்:
காணலுற்ற உருவோடே ராமசுரத் குமார்தான்
காட்சிதரு கின்றான்அண் ணாமலையில் அன்றே.

215
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/84&oldid=1303359" இலிருந்து மீள்விக்கப்பட்டது